Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on July 14, 2020, 02:26:43 PM
-
உண்மையில் கிரிப்டோ பற்றி ஒரு சரியான முடிவு வரல ஒருமுறை bitcoin ATM வைக்க முயன்ற ஒரு பிரபலமான trading company உரிமையாளர் கைது செய்யப்பட்டார் பெங்களூரில் இப்போது உச்சநீதிமன்றம் கிரிப்டோவுக்கு எதிராக தீர்ப்பு கொடுக்கவில்லை இனி என்ன செய்வார்கள்..
-
Ucha nethimantam thirpuku peraku crypto currency valarchi India la rembo athikam aahivettathu wazirx exchange mattum binance exchange indiala rembo mutha ledu seiragga aana thirummba crypto Ku atho mudivu eduka poratha kelvi patten.
-
Unmaya indiayala ethirkalathula crypto payanpadu athiharikum because daily um digital thuraila India munala poidu eruku , oru two years munnala indala digital currency veliedura madri oru news vanthu athanala crypto indiayala thadai panna vaipu kuraivu.
-
இந்த ஆண்டு பல வங்கிகள் கிரிப்டோ பரிமாற்றத்தை அனுமதிக்கிறது இது ஒரு நல்ல தொடக்கம் இப்போது பல கிரிப்டோ சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகிறது.
-
கிரிப்டோ வர்த்தகத்திற்கு விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளதாக நான் செய்திகளில் படித்தேன். ஆனால் வர்த்தகம் செய்ய தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என நான் நினைக்கிறேன்.
-
தற்போது இங்கு பல கிரிப்டோ பரிவர்த்தனை தளங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை நான் கிரிப்டோவுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையாக பார்க்கிறேன். மேலும் இங்கு கிரப்டோ சம்மந்தமாக எதிர்காலத்தில் பல சட்டங்கள் இயற்றப்படலாம் என நான் நினைக்கிறேன
-
இப்போது இந்தியாவில் கிரிப்டோவிற்கு தடை இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் பிறகு கிரிப்டோ சார்ந்த பல நிறுவனங்கள் இங்கு வர தொடங்கியுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
-
இப்போது இந்தியாவில் கிரிப்டோவிற்கு தடை இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் பிறகு கிரிப்டோ சார்ந்த பல நிறுவனங்கள் இங்கு வர தொடங்கியுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு கிரிப்டோவை முழுமையாக தடை செய்ய போவதாக அரசு அறிவித்துள்ளது உங்களுக்கு தெரியுமா? கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்டம் இயற்ற போவதாக அறிக்கப்பட்டது. ஆனால் அது இப்போது வரை கிடப்பில் உள்ளது. ஆனால் கிரிப்டோ நிபுணர்களின் கருத்துப் படி இதை முற்றிலும் தடை செய்ய வாய்ப்பில்லை எனவும் வரி விதிப்பு போன்ற சட்டங்களை இயற்றலாம் என கூறுகிறார்கள்.
-
கிரிப்டோ பற்றி இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கிரிப்டோவிற்கு தடை விதிக்க போவதில்லை அதற்கு மாறாக கிரிப்டோவை முறைப்படுத்த சட்டம் இயற்றப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே கிரிப்டோ வர்த்தகர்கள் இனி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன்.
-
இப்போது கிரிப்டோ வர்த்தகர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் கிரிப்டோ வர்த்தகம் தடை செய்ய படாது என அரசு அறிவித்துள்ளது. இதற்கு புதிய சட்டங்கள் மற்றும் வரி ஆகியவற்றை ஏற்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது கிரிப்டோ கரன்சி தடைசெய்யப்படாது அதற்கு பதிலாக 30% வரி கட்ட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இது சிறிய முதலீட்டாளர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும். இதனால் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே தான் பயனடைய முடியும்.
-
இந்திய அரசு கிரிப்டோ கரன்சிகளை வெறுக்கிறது. ஆனால் தடை செய்யவில்லை. முப்பது சதவீதம் வரி மற்றும் ஒவ்வொரு டிரேடுக்கும் ஒரு சதவீதம் TDS கட்ட வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தமான விஷயம் ஆகும்.